வேட்டைக்கு சென்ற இளைஞர்கள் துடிதுடித்து பலி

by Staff / 24-08-2023 04:30:55pm
வேட்டைக்கு சென்ற இளைஞர்கள் துடிதுடித்து பலி

மதுரை அருகே முயல் வேட்டைக்குச் சென்ற பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம், அலப்பலச்சேரியை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று இரவு முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது, காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு இளைஞர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via