உதவி ஆய்வாளர்பணி எழுத்து தேர்வு காவல்துறையில் பணிபுரியும் 170 நபர்கள் ஆப்சென்ட்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரன் ஆகியோர் இன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் பாளை தூய.யோவான் கல்லூரி தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு துறை ரீதியாக மொத்தம் 725 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்விற்கு ஆண் விண்ணப்பதாரர்களில் 634 நபர்களில் 490 நபர்கள், பெண் விண்ணப்பதாரர்களில் 91 நபர்களில் 65 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர் 170 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
Tags : உதவி ஆய்வாளர்பணி எழுத்து தேர்வு