மக்களை திசை திருப்புவதற்கான நாடகம் - இபிஎஸ் கருத்து

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார். ஊழல், சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை திசை திருப்பவே சனாதனத்தை கையில் எடுத்துள்ளது திமுக. பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். எனவே, மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
Tags :