விசிகவின் முதன்மை செயலர் உஞ்சை அரசன் காலமானார்

by Staff / 25-10-2023 01:58:28pm
விசிகவின் முதன்மை செயலர் உஞ்சை அரசன் காலமானார்

விசிக முதன்மைச் செயலர் உஞ்சைஅரசன் (67) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உஞ்சை விடுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் துரை ராஜன். 1990 காலகட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். திருமாவளவன் அறிவுறுத்தலின்பேரில், தனது பெயரை உஞ்சை அரசன் என மாற்றி கொண்டார். அண்மையில் கட்சி பணிக்காக கள்ளக்குறிச்சி சென்றிருந்தபோது, அக். 2ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதயம் செயலிழந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அசோக் நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு விசிக தலைவர் திருமாவளவன் கட்சிக் கொடியை போர்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, விசிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். உஞ்சை அரசன் மறைவையொட்டி, விசிக கொடிகள் ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via