படகு கவிழ்ந்துஉயிரிழப்பு ரூ. 2 லட்சம் நிவாரணம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

by Editor / 08-05-2023 06:56:04pm
படகு கவிழ்ந்துஉயிரிழப்பு  ரூ. 2 லட்சம் நிவாரணம். பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

கேரளாவின் மலப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர விபத்து நடந்தது. தனூர் கெட்டுங்கல் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மலப்புரத்தின் திருரங்கடியில் உள்ள தாலுக்கா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via