நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை

by Staff / 17-07-2023 01:03:03pm
நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதகமான சூழல் காரணமாக பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் கனமழை பெய்து வருவதால், பயணத்தை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கிடையில், முதல் குழுவில், 6,600 யாத்ரீகர்கள் தரிசனத்திற்காக புறப்பட்டனர். ஆனால் இரண்டு பக்தர்கள் அங்கு நடந்த விபத்துக்களில் இறந்தனர். ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

 

Tags :

Share via