12 வாரங்களுக்குப்பின்னர் இன்றுமுதல் மக்கள் குறைதீர்ப்புநாள்முகாம் துவக்கம்.

by Editor / 10-06-2024 12:27:35am
12 வாரங்களுக்குப்பின்னர் இன்றுமுதல் மக்கள் குறைதீர்ப்புநாள்முகாம் துவக்கம்.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் கடந்த 12 வாரங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டது தொடர்ந்து 10 ஆம் தேதியான இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் தொடங்கப்பட உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொதுமக்களிடம் திங்கட்கிழமை இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் மனுக்களை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.அனைத்துமாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

 

Tags : 12 வாரங்களுக்குப்பின்னர் இன்றுமுதல் மக்கள் குறைதீர்ப்புநாள்முகாம் துவக்கம்.

Share via