ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் மீது துப்பாக்கி சூடு..
மகாராட்டிராவின் மாலேகான் முன்னாள் மேயரும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அப்துல் மாலிக் முகமது யூனிஸ் இன்று (மே 27) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இதில் அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்தன. மார்பின் இடது பக்கம், வலது தொடை, வலது கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்துல் மகாராஷ்டிரா எம்ஐஎம் கிளையில் ஒரு முக்கிய தலைவராக உள்ளார். திங்கள்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் பழைய ஆக்ரா சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் முன் அமர்ந்திருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாசிக் போலீசார் தெரிவித்தனர்.
Tags :