பாளை போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

by Admin / 26-07-2021 02:22:46pm
பாளை போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை



நெல்லை மேல குலவணிகர்புரம் வேடுவர் காலனியை சேர்ந்த குமரேசன் (வயது39).
இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகி தங்கபுஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

தற்போது குமரேசன் நெல்லை மாநகர ஆயுதப் படையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனால் அங்குள்ள ஆயுதப் படை குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கத்தி கூச்சலிட்டார்.

அக்கம்பக்கத்தினர் பார்த்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகறாறு காரணமாக குமரேசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Tags :

Share via