ரயிலில் தொடர் கைவரிசையில் ஈடுபட்ட பலே சகோதரிகள் இருவரும் கைது

by Staff / 03-09-2024 11:43:48am
ரயிலில் தொடர் கைவரிசையில் ஈடுபட்ட பலே சகோதரிகள்  இருவரும் கைது

செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் தங்க நகைகள் திருடு போவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கூட்டத்தில் முண்டியடித்து ஏறும் பெண்களை குறிவைத்து கண்மணி, ரேகா ஆகிய 2 சகோதரிகள் கைவரிசையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via