ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில அதிர்வுகள்

by Admin / 18-01-2022 12:50:50pm
ஆப்கானிஸ்தானில்  அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில அதிர்வுகள்

ஆப்கானிஸ்தானில்   அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது

மேற்கு மாகாணமான பட் ஹிஸ் சில் மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்கு அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது 

கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்தது தரைமட்டமாகின துர்க்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அலறி அடித்தபடி ஓடினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் மற்றும் ஏற்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via