மருத்துவர் கொலை வழக்கு - தண்டனை கைதிகளுக்கு விடுதலை

by Staff / 14-06-2024 12:14:57pm
மருத்துவர் கொலை வழக்கு - தண்டனை கைதிகளுக்கு விடுதலை

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வைத்து 2013ஆம் ஆண்டு மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 7 பேருக்கு தூக்குத் தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இது குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை மற்றும் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.

 

Tags :

Share via