விளையாட்டு வீரர் கால் துண்டான விவகாரம் - இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி உதயநிதி

மதுரை கோச்சடை பகுதியில் கடந்த ஜுலை 26 ஆம் தேதி மாலை 3 பழுதடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்தனர்.அப்பொழுது அவ்வழியாக ஜூடோ விளையாட்டு வீரர் பருதி விக்னேஸ்வரன்(18) என்பவர் நடந்து வந்துள்ளார்.அப்போது மின் கம்பம் கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது.இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.
Tags :