குற்றாலத்தில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் சாரல் திருவிழா.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியதால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுக்கிறது.
ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னிட்டு பொழுதுபோக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது இந்த நிலையில் கடந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்தப்படாமல் இருந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சாரல் திருவிழா வரும் ஆகஸ்ட் 16, 17, 18, 19, ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளன இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது இது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மலர்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாரல் விழாவில் பழங்கள், காய்கறிகள் கண்காட்சி, நீச்சல் போட்டி, படகு போட்டி,பழங்கால கார்கள் கண்காட்சி, கொழுகொழு குழந்தைகள் போட்டி உள்ளிட்ட வழக்கமாக நடத்தப்படும் மேலும்
காலை முதல் மதியம் வரை பல்வேறு போட்டிகளும், மாலை முதல்இரவு வரை கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும்.
சாரல் விழாவில் பழங்கள், காய்கறிகள் கண்காட்சி, நீச்சல் போட்டி, படகு போட்டி,பழங்கால கார்கள் கண்காட்சி, கொழுகொழு குழந்தைகள் போட்டி உள்ளிட்ட வழக்கமாக நடத்தப்படும் போட்டிகள் உட்பட கூடுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
Tags : குற்றாலத்தில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் சாரல் திருவிழா.