ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது - ராகுல்காந்தி
ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பரப்புரையில் பேசிய அவர், "ஆதிவாசிகள் என்றால் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று பொருள். ஆதிவாசி என்ற பெயரை பயன்படுத்தினால், அவர்களிடம் இருக்கும் நிலத்தையும், நீரையும், வனத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், வனவாசி என்று அழைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :