2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

by Staff / 07-10-2023 02:50:56pm
2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 குழந்தைகளை உடலில் கட்டி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை கொண்டுள்ளார். தாய் தங்கமணி மற்றும் குழந்தைகள் பிரித்திகா, லஜித் உயிரிழந்துள்ளனர். கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில், மூன்று பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளனர். குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo