மகனை ஆணவக் கொலை செய்த தந்தை

by Staff / 15-04-2023 01:35:17pm
மகனை ஆணவக் கொலை செய்த தந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். திருப்பூரில் வேலை செய்துவரும் சுபாஷ், சமீபத்தில் அனுஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷின் தந்தை தண்டபாணி மகன், மருமகளை வீட்டிற்கு அழைத்துவந்து கொடுவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரை தடுக்க முயன்ற சுபாஷின் பாட்டி கண்ணம்மாளையும் வெட்டியுள்ளார். இதில் சுபாஷ், கண்ணம்மாள் ஆகிய இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். அனுசுயா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தண்டபாணியை தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via