இஸ்ரேலிய சுற்றுலா பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை
இஸ்ரேலிய சுற்றுலா பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து கர்நாடக கங்காவதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2025 மார்ச் 6ஆம் தேதி இரவு ஒரு சுற்றுலா பயணி குழுவை தாக்கி இஸ்ரேலிய பெண் மற்றும் ஒரு ஹோம் உரிமையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஒடிசாவை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணியை கால்வாயில் தள்ளி கொலை செய்த குற்றத்திற்காக மூன்று நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக உயிர் உள்ளவரை சிறை மற்றும் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனை உறுதி செய்யப்பட கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு .
Tags :



















