மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் பாஜக தலைவர் அண்ணாமலை.

by Editor / 02-03-2023 03:37:21pm
மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் பாஜக தலைவர் அண்ணாமலை.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது என அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றியிருக்கிறோம், இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கும், பொதுத்தேர்தலில் மற்றொரு கட்சி ஜெயிக்கும் என்ற வரலாறு தமிழகத்தில் உண்டு எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via