தண்ணீர் விற்ற பணத்திற்கு தகராறு ஒருவர் கொலை

by Editor / 04-06-2022 10:53:19am
 தண்ணீர் விற்ற பணத்திற்கு  தகராறு ஒருவர் கொலை

சென்னை ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோஜ்.  இவர் சொந்தமாக ட்ராக்டர் வைத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலில் செய்து வந்தார். ஏற்கனவே பிரபு சதீஸ் உள்ளிட்ட 3 பேருக்கும்  தண்ணீர் விற்ற பணம் 10 ஆயிரத்தை பங்கு போடுவதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் ஆவடி பகுதியில் மனோஜ் தண்ணீர் வினியோகம் செய்து கொண்டிருந்தார். மனோஜ் டிராக்டரில் வரும் பொழுது வழிமறித்த பிரபு, சதீஸ் உள்ளிட்ட 3 பேர், மனோஜை இரும்பு ராடால் அடித்தே கொடூரமாக கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஆவடி காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த பிரபு சதீஸ், பட்டாபிராமை சேர்ந்த கலையரசன் உள்ளிட்ட 3 பேர் மனோஜை இரும்பு தடியால் அடித்துக் கொன்றது அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பின் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.


 

 

Tags : A man was killed in a dispute over money for selling water

Share via