பட்டாசு விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்

by Staff / 09-10-2023 11:45:48am
பட்டாசு விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே விரகாலூரில் நாட்டுப் பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via