குடிபோதையில் ரகளை

by Admin / 08-02-2022 02:39:51pm
குடிபோதையில் ரகளை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தானே பகுதி பிவாண்டி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ண வந்துள்ளனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அங்கு, உணவருந்திய பிறகு அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சூழ்நிலை கைமீறிய நிலையில் உணவக ஊழியர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது  தம்பதி அங்கிருந்த 4 போலீசாரையும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் தம்பதியினரை கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரைண நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via