உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு

by Staff / 10-10-2023 11:50:11am
உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பாலாஜி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச்சென்று ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் ஒருகட்டத்தில் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்தப் பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்த நிலையில், பாலாஜியை கைது செய்தனர். அவரது குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via