எல்லையில் சீன  போர் விமானங்கள்  பயிற்சி; இந்திய ராணுவம் கண்காணிப்பு

by Editor / 08-06-2021 06:51:32pm
எல்லையில் சீன  போர் விமானங்கள்  பயிற்சி; இந்திய ராணுவம் கண்காணிப்பு

 


 லடாக்கின் கிழக்கு பகுதி அருகே சீன எல்லையில் அந்நாட்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இதனை இந்திய ராணுவம் கவனித்து வருகிறது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சீனாவின் ஜே11எஸ் போர் விமானங்கள் உள்ளிட்ட 22 போர் விமானங்கள் மற்றும் சில ஜே 16 போர் விமானங்கள் லடாக்கின் கிழக்கு பகுதிக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டன. சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹோடான், கர் குன்சா மற்றும் கஷ்கர் விமான படை தளங்களில் இந்த பயிற்சி நடந்தது.
இந்த பகுதிகளில், அனைத்து விமானங்களையும் தரையிறக்கும் வகையில் சீனா மேம்படுத்தியது. சீனாவின் எல்லைக்குள் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை, இந்திய தரப்பு உன்னிப்பாக கவனித்து வந்தது.கோடை காலத்தில் சீன படைகள் மற்றும் விமானங்கள் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய விமானப்படையும் தனது எல்லைப்பகுதியில் மிக் 29 ரக விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களை நிறுத்தி உள்ளது.
ரபேல் போர் விமானங்களையும் இந்த பகுதியில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளன. பாங்காங் பகுதியில் சீன ராணுவம் விலக்கி கொள்ளப்பட்டாலும், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் உள்ளன. ஹோடான் கர் குன்சா கஷ்கார், ஹோப்பிங், கோங்கோ ஜோங், லின்லி மற்றும் பன்காட் விமான தளங்களை இந்தியா  கவனித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

 

Tags :

Share via