நியூஸ் கிளிக் உரிமையாளரின் வீட்டில் சிபிஐ சோதனை
நியூஸ்க்ளிக் என்ற ஆன்லைன் செய்தி இணையதளம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு அங்கிருந்து நிதி பெற்றதாக சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று காலை முதல் பிரபீரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நியூக்ளிக் மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தியுடன் இணைந்து டெல்லி காவல்துறை தாக்கல் செய்த சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட வழக்கில் பிரபீர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
Tags :