தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம். எஸ். சுவாமிநாதன் பெயர் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 11-10-2023 04:17:22pm
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம். எஸ். சுவாமிநாதன் பெயர்  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண். 110-ன்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரை: தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via