:உலகமே இந்தியாவின் உணவு பொருள் ஏற்றுமதி எதிர்பார்க்கிறது

இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதி உலகம் எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியது அடுத்த இதனை தெரிவித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் உலகளவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரேன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாக கூறினார். இந்தியாவில் தானிய உற்பத்தியில் இந்தியா உணவு பொருள் ஏற்றுமதி எதிர்நோக்குவதாக கூறிய பியூஸ் கோயல் கடந்த சில வாரங்கள் 20 முதல் 30 லட்சம் டன்கள் வரை கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். பருப்பு வகைகள் இறக்குமதிகளின் மீது வகைகள் குறித்து அனைத்துவித நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
Tags :