சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லை… மதுரவாயலில் அவலம்!
மதுரவாயல் அருகே, சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் அருகே, அடையாளம்பட்டு பகுதியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு, தாம்பரம் புறவழிச்சாலை அருகே சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுடுகாட்டில் கொட்டுகின்றனர். இதனால் அங்கு டன் கணக்கில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது.
Tags :