192 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிர மழை... 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை...

by Admin / 27-07-2021 03:09:28pm
192 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிர மழை... 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை...


 
மகராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கொன்கன் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
நிலச்சரிவு ஏற்பட்ட தாலியே என்னும் பகுதியில் இருந்து இதுவரை 53 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியை தொடர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில் 9 மாவட்டங்களை சேர்ந்த 890 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via