வேன், கார் மோதல் - 10 பேர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து ஒரு வேன் கோபிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 5 பேர் இருந்தனர் காட்டூர் காலனி அருகே சென்றபோது கோவிலில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரும் வேனும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேன் மற்றும் காரில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கவந்தபடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Tags :