கொலை,கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 3 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெள்ளிமலை நிலைய பாலம் அருகே கடந்த 13.08.2023 -ம் தேதி அன்று கீழநத்தம், வடக்கூர், நடுவக்குறிச்சியை சேர்ந்த ராஜாமணி (32) என்பவரை
அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி தெற்கூர், கீழநத்தம், கண்ணம்மன் காலனியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் இசக்கிமுத்து(20), மேலூர், கீழநத்தம், சண்முகவிலாஸ் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மாயாண்டி என்ற பல்லா மாயாண்டி (22) ஆகிய இருவரும் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா காவல் ஆய்வாளர் கனகராஜ் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதே போன்று மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மேலபாண்டவர்மங்களம், அக்ரஹாரதெருவை சேர்ந்த பூலோக பாண்டியன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (26) என்பவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags : 3 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது.