பேருந்து உருண்டு விழுந்து விபத்து 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
சான் குவ சபா மாவட்டத்தில் இருந்து கிளம்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பேருந்து சென்றதே விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்தனர் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Tags :