பேருந்து உருண்டு விழுந்து விபத்து 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

by Admin / 11-03-2022 12:05:48pm
 பேருந்து உருண்டு விழுந்து விபத்து 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

சான் குவ சபா  மாவட்டத்தில் இருந்து கிளம்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக பேருந்து சென்றதே விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்தனர் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via