வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா சீமான் கேள்வி

by Staff / 01-09-2024 02:11:54pm
வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா சீமான் கேள்வி

யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் சூழலில், பல கோடிகளைக் கொட்டியிறைத்து, கார் பந்தயம் நடத்தி, மக்களைப் பெருஞ்சிரமத்திற்கு ஆளாக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. மக்களுக்கான ஆட்சியா? தனிப்பெருமுதலாளிகளுக்கான ஆட்சியா?

 

Tags :

Share via