வெறிநாய் கடித்து ஆடுகள் பலி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

by Staff / 01-09-2024 02:29:54pm
வெறிநாய் கடித்து ஆடுகள் பலி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வீரணம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் 2 ஆயிரம் ஆடுகளை வெறிநாய் கடித்துள்ளது. நாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்றக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இறந்த ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், நாய்கள் கடித்து, ஆடுகள் இறப்பதை தடுக்க, சரியான தீர்வு காண வேண்டும்” என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via