பட்டப்பகலில் சுட்டுக் கொலை
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் யூசுப் என்ற நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யூசுப் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, இரண்டு பைக்குகளில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் யூசுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டில், தனியார் நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கத்தை திருடிய வழக்கில் யூசுப் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய கும்பல் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :