ராணுவ வீரர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

by Staff / 19-10-2023 01:29:07pm
ராணுவ வீரர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேல்முருகன் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய மாசார்பட்டி காவல் நிலைய போலீசார். வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில், வெம்பூர் கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி என்ற வேல்முருகனுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் மாரிச்சாமி ராணுவ வீரர் வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை எடுத்து மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் மாரிச்சாமி கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via