ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

by Staff / 14-03-2024 12:54:48pm
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதுதொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.

 

Tags :

Share via