குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

by Editor / 31-10-2023 09:12:59am
குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று 30ஆம் தேதி மாலை கன மழை பெய்தது இந்த மழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பல மணி நேரம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளான குற்றாலம் பேரருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டியதைத் தொடர்ந்து குற்றாலம் பேரருவியிலும் பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து கொஞ்சம் குறைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தொட்டு தண்ணீர் கொட்டி வருவதால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓரத்தில் நின்று மட்டும் சுற்றுலா பயணிகள் குறித்து செல்வதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பழைய குற்றாலம் அருகில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதன் தொடர்ச்சியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்பொழுது,பழைய குற்றாலம் அருவி, குற்றாலம் பேரருவியில் நீராடிச் சென்ற வண்ணம் உள்ளனர் மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags : குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

Share via