சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

by Staff / 31-10-2023 12:43:06pm
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வார கால இடைக்கால ஜாமீன் வழக்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 52 நாட்களாக அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via