ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்... பயிற்சியின்போது விபரீதம்..
போர் ஒத்திகையில் ஈடுபட முயன்ற இந்திய ராணுவத்தின் மிக்-21 ரக போர் விமானம், ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தானின் மேற்கு செக்டார் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட நேற்று மாலை மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டது. ஆனால் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்படவே, முன்னெச்சரிக்கையாக விமானி விமானத்திலிருந்து வெளியே குதித்து தப்பியுள்ளார்.
ஆனால் போர் விமானம் ராஜஸ்தானின் பார்மர் கிராமத்தில் விழுந்து நொறுங்கியதில், குடிசை ஒன்றும் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
Tags :