தொடர் மழையால் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் அசாம்

by Staff / 18-05-2022 12:18:24pm
தொடர் மழையால்  வெள்ளக் காடாக காட்சியளிக்கும் அசாம்

அசாமில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் ராணுவம் விமானப்படை தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அசாம்  மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .அசாமின் மாவட்டத்தில் வீடுகள் சாலைகள் வயல்வெளிகள் என எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் ராணுவம் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது விளைநிலங்கள் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது ஆம்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாமில் இரு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது 89 முகாம்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மாநில மீட்பு குழுவினரும் முழுவீச்சில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் விமானப்படை மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் நிலைகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மிசோரம் மணிப்பூர் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு சாலை ரயில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் ஹேம்நாத் அவாவுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

 

Tags :

Share via