செங்கோட்டை நகராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது

by Staff / 18-01-2024 02:55:32pm
செங்கோட்டை நகராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது

செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும், பா.ஜ. 3 இடத்திலும், ராமலெட்சுமி, இசக்கி துரை ஆகிய 2  சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் 2-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி அதிமுக ஆதரவோடு நகர்மன்ற தலைவராக இருந்துவந்த நிலையில் நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இதன் தொடர்ச்சியாக மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், செங்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அரசின் சாதனை திட்டங்களை கிடப்பில் போட்டதாகவும் அதிமுக,மற்றும் பாஜக மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். குட்ட அரங்கத்தில் மோதலும் நடைபெற்று காவல்நிலையம் வரை புகார்கள் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்திலும் உள்ள நிலையில் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2 கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய கோரம் இல்லாததால் நகர்மன்ற கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் அதிமுக,பாஜக,காங்,திமுக கவுன்சிலர்கள் 19 பேர்  நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி செங்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் சுகந்தியிடம் மனு அளித்தனர். 24 வார்டுகளை உள்ளடக்கிய செங்கோட்டை நகராட்சியில் 19வது வார்டு உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவி ராம லட்சுமி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கோரி மனு அளித்த நிலையில் அந்த மனுவின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று18 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என ஆணையாளர் பொறுப்பு சுகந்தி அறிவித்திருந்தார் இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன மேலும் நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப் பெட்டிகளும் வாக்கு பதிவு செய்யும் இடம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது அதிமுகவை சார்ந்த ஒன்பது கவுன்சிலர்களும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நான்கு கவுன்சிலர்கள் என 13 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கத்திற்கு வந்தனர் நகர மன்ற ஆணையாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற மேலாளர் கண்ணன் வாக்கெடுப்புக்கு  தயார் நிலையில் இருந்தனர் 24 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு 20 கவுன்சிலர் தேவைப்படும் நிலையில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர். 11 மணி அளவில் அனைத்து கவுன்சிலர்கள் வந்த நிலையில் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி அன்று அதிமுகவை சார்ந்த பத்து கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவை சார்ந்த 4 கவுன்சிலர்கள் திமுகவைச் சார்ந்த ஐந்து கவுன்சிலர்கள் காங்கிரசைச் சார்ந்த ஒரு கவுன்சிலர் என 19 நபர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்திருந்த நிலையில் இன்று  ஒன்பது அதிமுக கவுன்சிலரும் நான்கு பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்கள் என 13 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு வழங்கிய ஐந்து திமுக கவுன்சிலர்களும் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த கவுன்சிலரும் என ஆறு கவுன்சிலர்கள் இந்த விவாத கூட்டத்தை மற்றும் வாக்கெடுப்பு கூட்டத்தை புறக்கணித்ததின் காரணமாகவும் அதிமுகவை சார்ந்த ஒரு கவுன்சிலரும் என ஏழு கவுன்சிலர்கள் வராததின் காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு 20 கவுன்சிலர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் கோரமில்லாததின் காரணமாக வாக்கெடுப்பு நடைபெறவில்லை நகரமன்ற தலைவர் ராமலட்சுமி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானம் தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து ஆணையாளர் சுகந்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக கூறி கூட்டு அரங்கை விட்டு வெளியே வந்தார் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கும் பொழுது கோரமில்லாததின் காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்

 

Tags :

Share via