வாடகைக்குத்தான் குடியிருக்கிறேன்-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

by Staff / 14-09-2022 02:56:30pm
வாடகைக்குத்தான் குடியிருக்கிறேன்-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 100 பேர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே தங்கியுள்ளேன். வாடகைக்குத்தான் குடியிருக்கிறேன். சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு இல்லை” என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு மட்டுமே குடியிருக்கிறேன். எனக்கு என அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட வசதிகள் எதுவும் கிடையாது.

என்னுடைய சொந்த ஊரிலேயே எனக்கு இல்லம் இருக்கிறது. சென்னையில் வாடகைக்கு தான் இருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் படிப்புக்காக அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியுள்ளேன்.

சொகுசு வசதி, பல கோடி ரூபாயில் வீடு என்பதெல்லாம் தவறான தகவல் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நேற்று சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் என்னிடம் இருந்து இரண்டு கைபேசியை மட்டுமே கைப்பற்றினர் என்று முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னை அடையற்றில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

Tags :

Share via