ஆம்புலன்ஸ் இல்லாததால் குழந்தை பலி - கதறிய தாய்

by Staff / 29-04-2023 12:16:56pm
ஆம்புலன்ஸ் இல்லாததால் குழந்தை பலி - கதறிய தாய்

மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படேரி கிராமத்தைச் சேர்ந்த ரேணு ஜாதவ் என்பவரின் ஆறு மாத பெண் குழந்தை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்குழந்தையை இந்தர்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் குழந்தை உயிரிழந்தது. சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது குழந்தையின் தாய் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

 

Tags :

Share via