அலங்காநல்லூர் கண்மாயில் எரிந்த நிலையில் எலும்பு கூடுகள்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மிகப்பெரிய ஆதனூர் கண்மாய் அமைந்துள்ளது. இக் கண்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கு எரிந்த நிலையில் எலும்புக் கூடுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுபற்றி அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்த போது சுமார் 2 அடி நீளத்திற்கு எலும்பு துண்டுகள் ஆங்காங்கே கிடந்தன. ஆனால் அது மனித எலும்புக்கூடா? அல்லது விலங்குகளின் எலும்புக் கூடா? என்று தெரியவில்லை.
அதனை கைப்பற்றிய போலீசார் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எலும்புக் கூடுகள் கிடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும் போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடி வருகின்றனர்.அலங்காநல்லூர் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களை கடத்தி கொண்டு வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா, மாந்திரீக வேலைக்காக இது போன்ற சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :