17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்; போலீஸ் விசாரணை

by Staff / 07-11-2023 12:21:33pm
17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்; போலீஸ் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுக்கா அண்ணாமலை பட்டியை சேர்ந்த ஆனந்தன், லட்சுமி தம்பதியின் மகன் மோகன்ராஜ் (28) கூலி தொழிலாளி இவருக்கு ஓமலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த மாதம் ஆறாம் தேதி இளம்பிள்ளை அருகே பெருமாள் கோயிலில் வைத்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்து அவர்கள் திட்டி அனுப்பிவிட்டதால் மோகன்ராஜ் சிறுமையை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிஃபர் சோனியா ராணியின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்ஐ சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via