பேருந்து மோதி 3 பேர் பலி.

by Staff / 07-11-2023 12:16:58pm
பேருந்து மோதி 3 பேர் பலி.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பயங்கர விபத்து நிகழ்ந்தது. பிளாட்பாரத்தின் மீது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். பேருந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via