மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு-எல்லையில் தீவீர சோதனை.

by Editor / 21-11-2022 12:16:56pm
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு-எல்லையில் தீவீர சோதனை.

மங்களூரில் நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான மேக்கரை பகுதியிலும், புலியரை பகுதியிலும்  அமைந்துள்ள சோதனை சாவடிகளில் க்யூ பிரான்ஞ் போலீசார் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள போலீசாரும் ஆயுதம் ஏந்தி சோதனை ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து வாகனங்களும் கேரளாவில் இருந்து பின்பு அனுப்பப்பட்டு வருகின்றன இருசக்கர வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன போலீசார் இந்த அதிரடி சோதனை காரணமாக எல்லைப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 

Tags :

Share via