தூத்துக்குடி: உணவுப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமமில்லாத சுமாா் 166 கிலோ உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகளில் மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிபாசு, காளிமுத்து ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Tags :