வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு,
கேரளமாநிலம் வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து பல்வேறு துறையினர் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளனர். சுகாதாரப்பணிகள் மாநில பணி இயக்குனர் ஜீவன்பாபு தலைமையில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார் . சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர். கே.ஜே. ரீனா, கூடுதல் இயக்குநர் டாக்டர். டாக்டர் ரீட்டா, மாநில திட்ட மேலாளர். பிஜோய் மற்றும் பலர் மாநில அளவிலான சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திலும், சுகாதார இயக்குநரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு, 19 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags : வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு,